திணவெடுத்த தோள்கள் எல்லாம்
திரை கட்டுகிறது என்று மகிழ்ந்தாயோ ?
வீழ்த்து விட்ட வீரமென்று
வினைபயன் பெருமை கொண்டாயோ ?
வீ ழ்ந்ததெல்லாம் வீரமல்ல ,
விதைகள் என்பதை அறிவாயோ ?
தமிழினமே!!!
நாசங்கள் செய்த பின்பும்
நாணமற்று நடுங்கி நிற்பதேனோ?
ஒற்றுமை இதுவென்று வேதத்தில் சொன்ன பின்பும்
வேற்றுமை எண்ணம் கொண்டு
வேதாளம் சென்றதேனோ ?
கோடிகள் குலம் கொண்டு
கோடியில் நிற்பதேனோ ?
திணவெடுத்த தோள்கள் எல்லாம்
திண்ணையில் சாய்ந்ததேனோ?
பார் ஆண்ட தமிழினம் இன்று
பரிதவித்து நிற்பதேனோ ?
போர்களும் தர்பார்களும் கொண்ட வம்சம்
சோறும் நீரும் இன்றி போனதேனோ?
சேனையும் களிர் யானையும் கொண்ட படைக்கூட்டம்தனை
சொறி நாய்களும் சூழ்ச்சி நரிகளும் துரத்துவதேனோ?
அடிவானமும் அந்திவானமும் கக்கத்தில் வைத்த மக்களெல்லாம்
துக்கத்தில் நிற்பதேனோ ?
சாஸ்திரமும் தர்ம சூத்திரமும் கண்ட கூட்டம் தனை
எம்மாத்திரமென்று பிறர் ஏளனம் செய்ய கண்டு நிற்பதேனோ?
எம் பெண்கள் முலை அறுத்த
கைகள் எல்லாம் முட்களாய் போகட்டும் ;
நாணம் கொன்ற
நாடிகள் எல்லாம் நாசமாய் ஆகட்டும்;
பொறுக்கித்தனம் செய்த பேதைகளே!
நின் குலம் நரகத்தில் செழிக்கட்டும்;
தமிழினம் வரும் ஒருநாள்
வேர் விட்டு ,
முட்டி முளை விட்டு,
குருத்து கிளை விட்டு,
திண்ண தூர் விட்டு,
கொன்று குலை அறுத்து ,
உன் குருதி குடிக்கும் என்பதை மறவாயோ?
அன்றும் உன் இனம் அழிக்காது
உன் குணம் அழிக்கும்
-முகி